Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடலில் கலக்கும் காவிரி நீர்! இதற்குத்தானா இத்தனை போராட்டம்

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (22:38 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன் காவிரியில் தண்ணீர் விட கோரி கர்நாடக அரசை எதிர்த்து தமிழகம்  முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தது. இந்த போராட்டத்தின் காரணமாகவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாகவும் காவிரி விஷயத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைத்தது.
 
இந்த நிலையில் காவிரி ஆற்றில் இருந்து கொள்ளிடத்தில் 98 ஆயிரம் கன அடிநீர் தற்போது திறந்து விடப்படுகிறது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். 
 
ஆனால் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணைகளோ, கதவணைகளோ இல்லாத‌தால், கர்நாடக அரசிடம் இருந்து போராடி பெற்ற காவிரி நீர், தற்போது நேரடியாக கடலில் கலந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் கூறி வருகின்றனர். 
 
இனிவரும் ஆண்டுகளிலாவது, பருவ காலம் தொடங்கும் முன்பே மராமத்து பணிகளை முடிப்பதுடன், கொள்ளிடம் ஆற்றில் 5 இடங்களில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments