Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா கணவர் நடராஜனுக்கு சிபிஐ பிடிவாரண்ட்

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (14:35 IST)
சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கனவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிபிஐ பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

 
சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கை எதிர்த்து நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
கடந்த மாதம் 17ஆம் தேதி உயர்நீதிமன்றம் நடராஜனுக்கு அளித்த தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து நடராஜன் உடல்நலம் காரணம் காட்டி உச்ச நீதிமன்றத்தின் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனு தாக்கல் செய்தார். 
 
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நடராஜனுக்கு சிறை செல்வதிலிருந்து தற்காலிமாக விலக்கு அளித்தது. இந்நிலையில் தற்போது உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்துள்ளதை அடுத்து சிபிஐ நடராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments