Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க முடியாது: சிபிஐ அதிரடி

Webdunia
செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (11:52 IST)
சிலை கடத்தல் வழக்கை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் அவர்கள் விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த நிலையில் சிபிஐ இந்த வழக்கை விசாரணை செய்ய முடியாது என்று கடிதம் எழுதியுள்ளது.

இந்த நிலையில் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் முன் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் முதலில் அரசாணை பிறப்பித்தது ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுப்பு தெரிவித்து கடிதம் அனுப்பியது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிலை கடத்தல் வழக்கை விசாரணை செய்ய சிபிஐ மறுத்துவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிபிஐ விசாரித்தால்தான் இந்த வழக்கின் பின்னணியில் உள்ளவர்கள் பிடிபட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments