Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலகலக்கும் உள்ளாட்சி தேர்தல்! – காலையிலேயே வந்து ஓட்டு போட்ட பிரமுகர்கள்!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (09:19 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலையிலேயே பிரமுகர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சினிமா, அரசியல் பிரபலங்கள் காலையிலேயே சென்று வாக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விஜய் சென்னையில் தனது வாக்கினை பதிவு செய்தார். கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி கிராப்பட்டியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அமைச்சர் கே.என்.நேரு திருச்சி தில்லை நகரில் வாக்கினை செலுத்தினார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். முத்தூர் வாக்குசாவடியில் செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் வாக்கு செலுத்தினார். மேலும் பல திரை மற்றும் அரசியல் பிரபலங்களும் தங்கள் வாக்கை செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments