Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஜாவை தேசிய பேரிடராக அறிவியுங்கள்... உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (11:23 IST)
கஜா புயலை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வழக்கறிஞர் அழகுமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்துள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் உருகுலைந்து போயுள்ளனர். கஜா புயலால் நாகை, திருவாரூர், தூத்துக்குடி, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி, வேதாரண்யம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்து போயுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பனை, வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்துள்ளன்.
 
பேயாட்டம் ஆடிய கஜாவால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். குடிக்க தண்ணீரின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கறிஞர் அழகுமணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு அளித்துள்ளார். அதில் பேரிழப்பு ஏற்படுத்திய இந்த கஜா புயலை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கி உத்தரவிட வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளார்.
 
இந்த வழக்கு அவசர வழக்காக இன்று பிற்பகல் 1 மணிக்கு விசாரணைக்கு வர இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments