Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிடுகிடுவென உயரும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம்

Webdunia
செவ்வாய், 31 அக்டோபர் 2017 (11:25 IST)
கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கன மழையை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.


 


கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையை புரட்டி போட்டது மழை வெள்ளம். தேசமே சென்னைக்காக சோகக்கண்ணீர் வடித்தது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையிலிருந்து நீர் திடீரென திறந்துவிடப்பட்டது. இதனால் சென்னை நகரமே  நீரில் மிதந்தது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகத்தில் பெய்யத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு சென்னையில் கனமழை அல்லது மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணையின் தற்போதைய நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 68.90 அடியாக உள்ளது. நேற்று 308 மில்லியன் கனஅடியாக இருந்த நீர் இருப்பு  இன்றைய காலை நிலவரப்படி 452 மி.கன அடியாக உயர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments