Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடையா?

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (12:56 IST)
மருத்துவப் படிப்பிற்காக நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள் இந்த ஆண்டு மருத்துவ படிப்பு படிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என தனியார் பள்ளி மாணவி பூஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் 
 
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் அரசு பள்ளி மாணவர்களை தங்கள் வீட்டு பிள்ளையாக பார்க்க வேண்டுமே தவிர எதிரியாக பார்க்க கூடாது என நீதிபதிகள் மனுதாரருக்கு அறிவுறுத்தல் செய்துள்ளார் 
 
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீ நீதி மன்றம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments