Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கொரோனா நகரமாகும் சென்னை! – மாநகராட்சி வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (11:09 IST)
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கும் கடுமையாக அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக தலைநகரான சென்னையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று உச்சமடைந்திருந்த நிலையில் தற்போது அங்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. வழக்கம்போல அலுவலகங்கள், கடைகள், சந்தைகள் இயங்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் சென்னையில் அதிகரித்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக 0.5 சதவீதமாக இருந்த புதிய பாதிப்புகள் தற்போது 2.5 சதவீதமாக உயர்ந்திருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது, சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட 12 மண்டலங்களில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்: அதிஷி தேர்வுக்கு ஆம் ஆத்மி பெண் எம்பி எதிர்ப்பு..!

நிபா வைரஸ் பரவல் எதிரொலி.! தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!!

அரவிந்த் கெஜ்ரிவாலை மீண்டும் டெல்லி முதல்வராக்குவேன்: அதிஷி சபதம்..!

பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்ற விஜய்.. மாலை தூவி மரியாதை..!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வீட்டிற்கு சென்றது ஏன்.? பிரதமர் மோடி விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments