Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் முன்பதிவு தொடக்கம்: கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (17:27 IST)
சென்னை கோவை இடையே நாளை வந்தே பாரத் ரயில் இயங்க இருக்கும் நிலையில் பிரதமர் மோடி இந்த ரயிலை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வர உள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை கோவை இடையில் ஆன வந்தே பாரத் ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. 
 
இந்த ரயில் கோவையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும் என்றும் திருப்பூர் ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மூன்று நிலையங்களில் மட்டும் இந்த ரயில் நிற்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
அதேபோல் மறு மார்க்கத்தில் மதியம் 2:25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கிளம்பும் வந்தே பாரத் ரயில் 08.15 மணிக்கு கோவை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த ரயிலில்  AC Chair Car வகுப்பில் சென்னையில் இருந்து கோவை செல்ல 1,215 ரூபாயும், AC Executive Chair Car வகுப்பில் சென்னையில் இருந்து கோவை செல்ல 2,310 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments