Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவுதான்! – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

Webdunia
வியாழன், 7 மே 2020 (12:18 IST)
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒருநாளில் மட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரோனா நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் “இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. சென்னையின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. களத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். விரைவில் நல்ல சேதி வரும். கொரோனா குறித்து தேவையின்று பயப்பட வேண்டாம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments