Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை பாதிப்புகளுக்கு உடனே அழையுங்கள்! – சென்னை மாநகராட்சி அவசர எண்கள்!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (11:16 IST)
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அவசர எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை: பொதுமக்கள் ஆச்சரியம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதலாக சென்னை முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழையால் பல பகுதிகளில் முழங்கால் அளவு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீர் வடிகால் காரணமாக சில பகுதிகளில் வேகமாக மழைநீர் வடிந்துள்ளது.

இந்நிலையில் தொடர்மழை காரணமாக மழைநீர் தேங்குதல், மின்கசிவு, மின் வெட்டு போன்ற புகார்களை தெரிவிக்க இலவச உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

புகார்களை தெரிவிக்க அவசர உதவி எண்ணான 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்களான 044-25619207, 044-25619208 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இதுதவிட சென்னை மாநகராட்சி செயலியான ‘நம்ம சென்னை ஆப்’ மூலமாகவும், மாநகராட்சியின் ட்விட்டர் கணக்கு வழியாகவும் புகார்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உலக வங்கி $108 மில்லியன் நிதியுதவி.. இந்த நேரத்தில் இது தேவையா?

இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்: எல்லையில் பதட்டம்..!

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்ல.. மதவாரி கணக்கெடுப்பும் உண்டாம்.. மோடியின் ராஜதந்திரம்..!

12 வயது இந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 73 வயது முஸ்லீம் நபர்.. அதிர்ச்சி சம்பவம்..!

தவெக மோர்ப்பந்தல் அகற்றம்.. திமுக மோர்ப்பந்தலில் கை வைக்காத மாநகராட்சி ஊழியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments