Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை மீறி குவியும் கூட்டம்: கோயம்பேடு மார்க்கெட் இடம் மாற்றம்?

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (11:33 IST)
ஊரடங்கு விதிகளை மீறியும் தொடர்ந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குவிவதால் மார்க்கெட்டை இடம் மாற்றுவது குறித்து சென்னை மாநகராட்சி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நாள்தோரும் காய்கறிகள் வாங்க சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மக்கள் வருகை புரிகின்றனர். மிகவும் நெருக்கமான பகுதியாக மார்க்கெட் உள்ளதால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது சிக்கலுக்குரியதாக உள்ளது. இந்நிலையில் கோயம்பேட்டில் இருவருக்கு கொரோனா இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் , காவல் துறை ஆணையர் மற்றும் பலர் கலந்தாலோசித்து வருகின்றனர். சமூக இடவெளியை கடைப்பிடிப்பதில் சிரமங்கள் உள்ள நிலையில் மக்களும் பலர் கோயம்பேடு மார்க்கெட்டில் குவிவதை குறைக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோயம்பேட்டில் சில கடைகளை மட்டும் இயங்க அனுமதி அளிக்கவும், மீத கடைகளை மாதவரம் மற்று கேளம்பாக்கம் பகுதிகளுக்கு தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யவும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதனால் வழக்கமான வியாபாரத்தில் சுணக்கம் ஏற்படலாம் என வியாபாரிகள் தயங்குவதாகவும் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments