Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கால் குறைந்த பயணிகள் – சென்னையில் 126 விமானங்கள் ரத்து!

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (12:02 IST)
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உள்நாட்டு விமான சேவை அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் சென்னையில் விமானங்கள் ரத்தாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 2 வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் அவசர தேவை கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் பல மாநிலங்களிலும் ஊரடங்கு இருப்பதால் பலர் பயணங்களை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இன்று சென்னைக்கு சில விமான சேவைகள் நடந்தாலும், மிகவும் குறைவான பயணிகள் கொண்ட விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி இன்று மட்டும் சென்னையிலிருந்து புறப்பட இருந்த மற்றும் சென்னைக்கு வரவிருந்த 126 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments