Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக் ஓட்ட கற்று கொண்டபோது விபத்து: சென்னை இளம்பெண் பலி

Webdunia
புதன், 11 செப்டம்பர் 2019 (09:35 IST)
சென்னையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பருடன் பைக் ஓட்ட கற்றுக்கொண்டபோது ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக பலியானார். அவருக்கு பைக் ஓட்ட கற்றுக்கொடுத்த இளைஞர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
 
சென்னை குன்றத்தூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளி வட்ட சாலையில் அபிநயா என்ற இளம்பெண் தன்னுடன் பணிபுரியும் அண்ணாமலை என்பவருடன் பைக் ஓட்ட கற்று கொண்டிருந்தார். அபிநயா பைக் ஓட்ட, அவருக்கு பின்னாள் அமர்ந்திருந்த அண்ணாமலை அவருக்கு பைக் ஓட்ட கற்று கொடுத்து கொண்டிருந்தார். இந்த நிலையில் அபிநயா ஓட்டிய பைக் திடீரென எதிர்பாராதவிதமாக தடுப்புச்சுவரில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் அபிநயாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானதும் தெரியவந்தது. மேலும் படுகாயம் அடைந்த அண்ணாமலை சாலையிலேயே மயக்கமடைந்தார்
 
 
இந்த நிலையில் இருசக்கர வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி, இளம் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாகவும், இளைஞர் ஒருவர் மயங்கி  கிடப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார், பெண்ணின் உடலை கைப்பற்றி, இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments