Webdunia - Bharat's app for daily news and videos

Install App

8 நாட்களில் 58 சதவீத வடகிழக்கு பருவமழை - தத்தளிக்கும் சென்னை

Webdunia
சனி, 4 நவம்பர் 2017 (10:30 IST)
தமிழகத்தில் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழையின் 54 சதவீதம் கடந்த 8 நாட்களில் சென்னையில் மட்டுமே பெய்திருப்பது தெரியவந்துள்ளது.


 

 
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. ஆனால், தொடக்கம் முதலே கனமழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக சென்னை உட்பட கடலோர மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகை, கன்யாகுமரி, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
 
குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக  பெய்து வரும் மழையால் சென்னை வாசிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நேற்று முன்தினம் இரவில் பெய்த மழையில் சென்னையின் பள்ளமான பல பகுதிகள் நீரால் சூழப்பட்டது.  மீஞ்சூர், கோவிலம்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதில் வீட்டிலிருந்து பொருட்கள் சேதமடைந்தன.
 
வடகிழக்கு பருவமழை கடந்த 27ம் தேதி தொடங்கியது. இதுவரை தமிழகத்தில் 554.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பொதுவாக வருடத்திற்கு 750 மி.மீட்டர் மழை பொழிவு இருக்கும். அப்படிப் பார்த்தால் கடந்த 8 நாட்களில் எதிர்பார்க்கப்பட்ட வடகிழக்கு பருவமழையில் 74 சதவீதம் மழை பெய்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 441.3 சதவீத மழை பெய்துள்ளது. அதாவது 58.84 சதவீத வடகிழக்கு பருவமழை கடந்த 8 நாட்களில் சென்னையில் மட்டும் பெய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments