Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.எஸ்.பாரதி வழக்கு; ஜாமீனை ரத்து செய்ய ஏன் ஆர்வம்? – காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (11:46 IST)
திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை சார்பில் கோரப்பட்டது குறித்தி நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பட்டியலின சமூகத்தினரை இழிவுப்படுத்தும் விதமாக திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி பேசியதாக சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். பிறகு ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று விசாரனைக்கு வந்த இந்த வழக்கில் கேள்வியெழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் “ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை ஆர்வம் காட்டுவது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் மாநில அரசுகள் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கின்றன என சுட்டிக்காட்டிய நீதிமன்றம் மனு மீதான விசாரணையை 19ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments