Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை லாக்கப் மரணம்: மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (20:58 IST)
சென்னையில் நடந்த லாக்கப் மரணம் குறித்து தாமாகவே முன்வந்து மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதியாக சென்ற ராஜசேகர் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இது குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கும் நிலையில் இந்த மரணம் தொடர்பாக  மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. 
 
சென்னை மாநகர காவல் ஆணையர் இதுகுறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணைய தலைவர் எஸ்.பாஸ்கரன் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது/ ஏற்கனவே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments