Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் கனமழைக்கு காரணம் என்ன? வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (13:21 IST)
சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் திடீரென கனமழை பெய்துள்ளதை அடுத்து இதற்கு என்ன காரணம் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் மேனன் பேட்டி அளித்துள்ளார். 
 
இது குறித்து அவர் மேலும் கூறிய போது ’வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவே சென்னை உள்பட பல பகுதிகளில் மழை பெய்துள்ளது என்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தென்கிழக்கு பகுதியில் இருந்து வடபகுதி நோக்கி காற்று சென்றபோது காற்றின் வேகம் அதிகரித்ததன் காரணமாக  மேலடுக்கு சுழற்சி உருவாகி மெதுவாக நடந்து கொண்டுள்ளது என்றும் இதனால் தான் மழை பெய்கிறது என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். இன்னும் இரண்டு தினங்களில் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளிலும் ஜூன் 22ஆம் தேதி ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
மேலும்  மத்திய மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் மணிக்கு  45 முதல் 55 வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுரைத்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments