Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிகாலை முதல் கனமழை: 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என தகவல்!

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2022 (07:58 IST)
சென்னையில் இன்று அதிகாலை முதல் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் இன்னும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது
 
ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் திறக்கப்பட உள்ள நிலையில் இன்று காலை முதல் மழை பெய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்றும் இன்று மட்டும் அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments