Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடெங்கும் அக்னிபாத் எதிரான வன்முறை..! – உஷார் நிலையில் சென்னை!

Central railway station
Webdunia
ஞாயிறு, 19 ஜூன் 2022 (11:34 IST)
நாடு முழுவதும் மத்திய அரசின் அக்னிபாத் ராணுவ பணி திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ராணுவத்தில் 4 ஆண்டுகள் குறுகிய கால பணி அளிக்கும் அக்னிபாத் ராணுவப்பணி திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டது, தமிழ்நாடு தலைநகர் சென்னையிலும் போர் நினைவு சின்னம் அருகே 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட சூழலில் சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு சென்னை மாநகர் முழுவதும் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

நேற்று போராட்டம் நடந்த நிலையில் இன்று நேப்பியர் பாலம் தொடங்கி போர் நினைவுச்சின்னம் வரை உள்ள சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொடிமர சாலை முதல் போர்நினைவுச்சின்னம் வரை உள்ள சாலையும் முடக்கப்பட்டுள்ளது. அரசு வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் மற்றும் அந்த பகுதியில் வசிப்போரின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் அதிகமான போக்குவரத்து நடைபெறும் பகுதிகளான கோயம்பேடு, எழும்பூர், செண்ட்ரல் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உக்ரைனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய ராணுவம்.. மக்கள் வெளியேற்றப்பட்டார்களா?

6 மணி நேரம் 583 பேருடன் தொடர்ந்து ஜல்சா..! அடுத்த நொடி கவர்ச்சி நடிகைக்கு நேர்ந்த சோகம்!

தவெகவினர் ட்ரெண்ட் ஆவதற்காக இப்படி செய்கிறார்கள்!? - வியாசர்பாடி சம்பவம் குறித்து காவல்துறை விளக்கம்!

சென்னை கேளிக்கை பூங்கா ராட்சத ராட்டினத்தில் கோளாறு.. 3 மணி நேரம் அந்தரத்தில் 30 பேர்..!

வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்தில் இன்று ஆரஞ்சு அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments