Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பரோட்டா சாப்பிட்ட மாணவர் மரணம்? – அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (11:24 IST)
சென்னையில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொரட்டூர் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் சிபி. இவர் நேற்று இரவு நேர சிற்றுண்டி உணவகம் ஒன்றில் இரவு உணவை முடித்துக் கொண்டு வீட்டிற்கு சென்று படுத்துள்ளார். சில மணி நேரங்களில் அவருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனை கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் சிபி மூச்சுதிணறலால் உயிரிழந்துள்ளார். சிபி மரணத்திற்கு அவர் சாப்பிட்ட பரோட்டாவே காரணம் என அவரது உறவினர் குற்றம் சாட்டிய நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிபிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட பரோட்டாதான் காரணமா என்பது பிரேத பரிசோதனைக்கு பின்பே தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் மருத்துவர் பாலியல் கொலை விவகாரம்.! தலையிட கோரி பிரதமர் - ஜனாதிபதிக்கு மருத்துவர்கள் கடிதம்..!!

சூடுபிடிக்கும் சட்டமன்ற தேர்தல்..! ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி நாளை பரப்புரை..!!

சிறைகளால் என்னை பலவீனப்படுத்த முடியாது.! தேச விரோத சக்திகளுக்கு எதிராக போராடுவோம்.! கெஜ்ரிவால்...

மக்கள் பிரச்சனைகளில் எந்த வித ஈடுபாடும் விஜய்க்கு இல்லை.. கம்யூனிஸ்ட் கட்சி தாக்கு..!

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் ஒருநாள் மட்டும் ரத்து.. எந்த நாள்? என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments