Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

Siva
வெள்ளி, 17 மே 2024 (11:32 IST)
பராமரிப்பு பணி காரணமாக வரும் 31ஆம் தேதி வரை திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
சென்னை சென்டிரலில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16057) வருகிற 31-ந்தேதி வரை ரேணிகுண்டா-திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது. 
 
அதே தேதிகளில், திருப்பதியில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16058) திருப்பதி-ரேணிகுண்டா இடையே பகுதி நேரமாக ரத்துசெய்யப்படுகிறது. 
 
அதேபோல, சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16053) வருகிற 31-ந்தேதி வரை ரேணிகுண்டா-திருப்பதி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. 
 
அதே தேதிகளில், திருப்பதியில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (16054) திருப்பதி-ரேணிகுண்டா இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments