Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் போக்குவரத்து மாற்றம்: மாநகர காவல்துறை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (17:14 IST)
சென்னையில் நேற்று திடீரென பெய்த கனமழை காரணமாக பல சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பது காரணத்தாலும் இன்றும் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தாலும் சென்னை பெருநகர போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் வாணி மஹால் வழியாக செல்லும் பேருந்துகள் பாரதிராஜா ஜங்ஷன் வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது 
 
சென்னை பெருநகரில் மழைநீர் தேங்கி உள்ள சுரங்கப் பாதை மற்றும் சாலைகளில் உள்ள மழை நீரை மோட்டார் பம்பு செட்டுகள் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாகல் அந்த பகுதியிலும் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
 
மேலும் ஒருசில சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் தாங்கள் செல்லும் இடங்களுக்கு தகுந்தாற்போல் பொதுமக்கள் மாற்று சாலைகளை தேர்ந்தெடுத்து கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
மேலும் கேகே நகர், ராஜமன்னார் சாலை, கேபி தாசன் சாலை, ராஜரத்தினம் மைதானம் சாலை, திருமலைப்பிள்ளை சாலை, பிரகாசம் சாலை, அண்ணா சாலை ஆகியவற்றில் தண்ணீர் தேங்கி உள்ளதால் வாகனங்கள் மெதுவாக செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! டூர் ப்ளானை கேன்சல் செய்யும் ஆயிரக்கணக்கான மக்கள்!

பஹல்காம் தாக்குதல் தேர்தல் நேர அரசியலா? பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அசாம் எம்.எல்.ஏ கைது!

சீறும் ஏவுகணைகள்.. பாயும் ரஃபேல் விமானங்கள்! இந்திய ராணுவம் தீவிர பயிற்சி!

வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க கூடாது: மத்திய அரசு..!

அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் ராகுல் காந்திக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments