Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே 4 முதல் பேருந்து சேவையா? மாஸ்க் அணியா விட்டால் பேருந்தில் ஏற தடை:!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (11:44 IST)
சென்னை மாநகராட்சி பேருந்துகளில் பயணிக்க மே 4 முதல் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் இரண்டாவது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மே 3 உடன் இந்த ஊரடங்கு முடிய உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு குறையாவிட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற கேள்வியும் உள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மே 4 முதல் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மாஸ்க் அணியாதவர்களை பேருந்தில் ஏற அனுமதிக்க கூடாது.
ஓட்டுனர்களும், நடத்துனர்களும் குறிப்பிட்ட நேர இடைவெளிக்கு ஒருமுறை கைகளை சோப்பு, சானிட்டைசர் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பேருந்துகளில் பயணிகள் இடையே சமூக இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் மே 4 முதல் சென்னையில் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஊரடங்கு நிறைவுறும் சூழலில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இந்த சுற்றறிக்கை போக்குவரத்து ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தமிழக அரசின் முடிவை தொடர்ந்தே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments