Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23 கோடி பறிமுதல்; 700 கோடி கணக்கில் இல்லை! – செட்டிநாடு குழும ரெய்டில் தகவல்!

Tamilnadu
Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (14:51 IST)
தென்னிந்தியாவில் பிரபலமான செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை சோதனையில் ஏராளமான பணம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், அரசு அதிகாரி வீடுகள் என பல பகுதிகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதலாக செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.

தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் உள்ள செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 60 இடங்களில் நடந்த சோதனையில் 23 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சொத்துக்கள் 110 கோடி ரூபாய் அளவிற்கு கண்டறியப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாது ரூ.700 கோடி மதிப்பிலான வருமானத்தை கணக்கில் காட்டததாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

பல் சிகிச்சை செய்தமூளை தொற்று 8 பேர் உயிரிழப்பு.. திருப்பத்தூர் மருத்துவமனைக்கு சீல்..!

இந்தியாவின் தேசிய மொழி இதுதான்: ஸ்பெயினில் கனிமொழி சொன்ன பதில்..!

பாகிஸ்தானில் வரலாறு காணாத அதிர்ச்சி.. சிறை சுவர்கள் உடைப்பு.. தப்பிய 200 கைதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments