Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசிய செஸ் கூட்டமைப்பின் சிறந்த மனிதருக்கான விருது

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (21:18 IST)
சமீபத்தில்  44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை  தமிழ்நாடு அரசு நடத்தியது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு  2023ஆம் ஆண்டிற்கான ஆசிய செஸ் கூட்டமைப்பின் சிறந்த மனிதருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உதய நிதி ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

’’மாண்புமிகு  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டலில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கிற வகையில் கழக அரசு நடத்தியது. இதனை போற்றுகிற வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு  2023ஆம் ஆண்டிற்கான ஆசிய செஸ் கூட்டமைப்பின் சிறந்த மனிதருக்கான விருதினை (Man of the Year Award) ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் திரு.பரத் சிங் செளகான் உள்ளிட்டோர் இன்று வழங்கினார்கள். இந்த பெருமைமிகு நிகழ்வில் பங்கேற்று மகிழ்ந்தோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக,  ’’ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 3 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச ஹாக்கிப் போட்டிக்காக புனரமைக்கப்பட்டுள்ள Pavilion-ஐ இன்று ஆய்வு செய்தோம்.  இந்த சிறப்புக்குரிய Pavilion-ஐ மாண்புமிகு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை திறந்து வைக்கவுள்ளார்கள். இந்த நிகழ்வில் ஹாக்கி வீரர்களும் - ஆர்வலர்களும் திரளாக வருகை தந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments