Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்க கடலில் உருவாகிறது ‘சிட்ரங் புயல்’; தமிழகத்திற்கு ஆபத்தா?

Webdunia
புதன், 19 அக்டோபர் 2022 (12:12 IST)
வங்க கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் காலம் நெருங்கி வரும் நிலையில் வங்க கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக வளிமண்டல சுழற்சியால் தொடர்ந்து பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மத்திய மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து வடமேற்கில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணித்தால்... ஓட்டுநர்களுக்கு முக்கிய சுற்றறிக்கை!

அக்டோபர் 22ம் தேதி வாக்கில் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள இந்த புயலுக்கு ‘சிட்ரங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் உருவான பிறகு அது பயணிக்கும் திசையை பொறுத்தே வலுபெறுமா? எந்த இடத்தில் கரையை கடக்கும் போன்ற தகவல்களை கணிக்க இயலும் என்றும் கூறப்படுகிறது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments