Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாமியார் வீட்டுக்கு செல்லப்போவது யார்?: தினகரனா? எடப்பாடியா?

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (13:04 IST)
ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரன் ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அவர்களும் பதிலுக்கு தினகரனை விமர்சித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று தன்னை வெற்றிபெறச்செய்து சட்டமன்றத்துக்கு அனுப்பிய ஆர்கே நகர் தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்த தனது ஆதரவாளர்களுடன் ஆர்கே நகருக்கு சென்றார் தினகரன். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அவர்.
 
அப்போது பேசிய அவர், நான் முதல்வரை தரம் தாழ்த்திப் பேசுகிறேன் என்று தங்கமணி கூறுகிறார். உண்மையில், முதல்வரும் அமைச்சர்களும்தான் என்னை ஒருமையில் பேசி வருகின்றனர் என்றார்.
 
மேலும் அவர்கள் கூறுகையில் நான் மாமியார் வீட்டுக்குச் செல்லும் நிலையில் நான் இருப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் தற்போது அவர்கள்தான் அந்த நிலையில் உள்ளனர் என்றார் தினகரன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments