Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓய்வு: ஆபரேசன் சக்ஸஸ்!

Webdunia
திங்கள், 5 பிப்ரவரி 2018 (13:11 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்ணில் புரை ஏற்பட்டதால். அவருக்கு ஆபரேசன் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மேலும் இரண்டு நாட்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடந்த சில தினங்களாக கண்களில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. கண்களில் தொடர்ந்து தூசி படிந்து வருவதால் கண் புரை நோய் வரும். இதனால் பாதிக்கப்பட்ட அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
 
இந்த ஆப்ரேசன் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு முதல்வர் நலமுடன் வீடு திரும்பியுள்ளார். அரசு மருத்துவமனை இயக்குனர் மேற்பார்வையில் இந்த ஆபரேசன் செய்யப்பட்டது. மருத்துவர்கள் அவரை இரண்டு நாட்கள் ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் மீண்டும் பணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.
 
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ பிடித்து எரிந்ததை அடுத்து, அது ஆட்சிக்கும், ஆட்சியாளருக்கும் ஆபத்து என கூறப்பட்டுள்ள நிலையில் முதல்வருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments