Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் புத்தகம்… விரைவில் வெளியீடு!

Webdunia
வியாழன், 17 பிப்ரவரி 2022 (10:31 IST)
முதல்வர் மு க ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் என்ற புத்தகம் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சி இந்த ஆண்டு கொரோனா மூன்றாம் அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இப்போது கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ளதால் நேற்று முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கிறது. விழாவைத் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது அவர் ‘இந்த மகிழ்ச்சியான நேரத்தில் நான் ஒரு ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளேன். நான் எழுதியிருக்கும் உங்களில் ஒருவன் என்ற புத்தகம் விரைவில் இந்த புத்தகக் கண்காட்சியிலேயே வெளியாக உள்ளது. என்னுடைய 23 ஆண்டுகால பயணத்தை அதில் பதிவு செய்து இருக்கிறேன். என்னுடைய பள்ளி, கல்லூரி, இளமைக்காலம், கட்சி அரசியலில் நுழைவு, நான் முதலில் நடத்திய கூட்டம் என அதில் பதிவு செய்துள்ளேன். 1976 ஆம் ஆண்டுவரையிலான வாழ்க்கையை அதில் முதல் பாகமாக பதிவு செய்துள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments