Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரூரில் நினைவு சின்னம்!... தாய் மாமன் திட்டம்!.. முதல்வர் விஜய் பேச்சு!...

Advertiesment
vijay
தமிழக முதலமைச்சர் விஜய் இன்று காலை கரூர் சென்ற நிலையில் அங்கு மக்கள் முன்பு அவர் பேசியதாவது:

கரூர் சம்பவம் ஒரு பெரிய வலியாக மாறிவிட்டது.. நாங்கள் அரியலூரில் கூட்டத்தை முடித்துவிட்டு அடுத்து பெரம்பலூர் செல்ல திட்டமிட்டோம். ஆனால் கூட்டம் அதிகமாக கூடிவிட்டதாக சொல்லி காவல்துறை அனுமதி மறுத்தது.. அதை நாங்களும் ஏற்றுக்கொண்டோம்.. அதேபோல் நாமக்கல்லில் இருந்து நாங்கள் கரூருக்கு வந்த போது எங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்திருக்கலாம்.. காவல்துறை நினைத்திருந்தால் அந்த கூட்டத்தை ரத்து செய்திருக்க முடியும்.. ஆனால் எங்களை பைபாஸிலிருந்து அந்த இடத்திற்கு காவல்துறைதான் கூட்டி சென்றது..

அவர்களை வழிநடத்தியது யார் என்பதுதான் கேள்வி.. கரூர் கூட்டத்திற்கு போலீசார் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை.. ஆனால் என் மீது பழியை போட்டார்கள்.. அந்த பலியை திமுக அரசியல் ஆதாயம் தேடியது. சட்டசபையில் பேசிய ஸ்டாலின் சார் என் மீது பழி போட்டார்.. எனக்கு எல்லாம் கொடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கவே நான் அரசியலுக்கு வந்தேன்.. பணம் எனக்கு முக்கியமில்லை.. ஜனம்தான் முக்கியம்.. கரூரில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும்’ என விஜய் கூறினார்..

மேலும் ‘தவெக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பைசா கூட லஞ்சம் இல்லை.. ஊழல் இல்லை.. அரசு அலுவலகங்களில் வேலை வேகமாக நடக்கிறது.. அதை விட முக்கியம் அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது.. ஊழல், லஞ்சம் இல்லை என மக்கள் கூறுவதை கேட்கும் போது நமக்கு சந்தோசமாக இருக்கிறது..

செப்டம்பர் 15ம் தேதி அண்ணா பிறந்தநாளின் போது தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் துவங்கப்படும்.. மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறுசீரமப்பை தமிழகம் ஏற்காது.. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்.. நீதிமன்றத்தில் திமுக சரியாக கையாளவில்லை’ என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் ஆரம்பிப்பது எப்போது? கரூரில் முதல்வர் விஜய் அறிவிப்பு..!