Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிந்தியில் பேசுங்கள் ; தமிழக மீனவர்களை சுட்ட கடற்படை வீரர்கள்

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (17:21 IST)
கடலில் மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வர மீனவர்களை இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜெபமாலை என்பவருக்கு சொந்தமான படகில் 4 மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். நடுக்கடலில் அவர்கள் வலைகளை உலர்த்திக் கொண்டிருந்த போது, அங்கு இந்திய கடற்படை வீரர்கள் அவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். அப்போது, மீனவர்கள் தமிழில் பேசியது கேட்டு அவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.
 
ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பேசு எனக்கூறி மீனவர்களை தாக்கிய அவர்கள், ஒருகட்டத்தில் ரப்பர் குண்டுகள் நிரம்பிய துப்பாக்கியால் சுடத் தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஆரோக்கியம்(38) மற்றும் ஜான்சன்(30) என்ற இரண்டு மீனவர்கள் காயமடைந்தனர். அதன் பின் கரை திரும்பிய அவர்கள் ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த துப்பாக்கி சூட்டை நாங்கள் நடத்தவில்லை என கடலோர காவல்படையினர் மறுத்துள்ளனர்.
 
கடலோர காவற்படை வீரர்களை கண்டித்து போராட்டம் நடத்த மீனவர்கள்  முடிவு செய்துள்ளனர்.
 
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran Hari Ini!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments