Publish Date: Thu, 30 Dec 2021 (22:34 IST)
Updated Date: Thu, 30 Dec 2021 (22:35 IST)
கோவை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் மற்றும் வலிமை வைரஸ் பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஏற்கனவே சென்னை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் அதிக நபர்கள் கூடினால் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் இரவு 12 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் சென்னையை அடுத்து கோவை மாவட்டத்தில் உணவகங்கள், தங்கும் விடுதிகள் கேளிக்கை விடுதிகள், சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்