Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை பொருள் மற்றும் குழந்தைகள் பாலியல் தடுக்கும் வண்ணமாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 78 கி.மீ சைக்கிள் பேரணி.

J.Durai
சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:30 IST)
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருட்களை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிகளவில் பாதித்து வருவதாலும் மற்றும் குழந்தைகளுக்கு அதிக பாலியல் கொடுமையை தடுக்கும் விதமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் 78 கிலோ மீட்டர் சைக்கிள் பேரணியாக சென்றார்.
 
இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சைக்கிள் 
பேரணி தொடங்கியது.
சைக்கிள் 
பேரணியில் 16 வயது முதல் பெரியவர் வரை பேரணியில் கலந்து கொண்டனர்.
 
சைக்கிள் பேரணியை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
 
பின்னர் காவல் அனைவரும் பொதுமக்களுடன் சேர்ந்து சைக்கிள் பேரணியில் பயணம் செய்தார்.பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
பேரணி காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து தொடங்கி டவுன் ஹால்,செட்டி வீதி,பேரூர், பச்சாபாளையம்,ஆலந்துறை, மாதம்பட்டி,சாடி வயல்,ஈசா யோகா சென்று அடையும்.அதன் பின் அங்கிருந்து புறப்பட்டு அதே வழியாக வந்து இறுதியாக அவிநாசி சாலையில் உள்ள பி.ஆர்.எஸ் மைதானத்தில் நிறைவடையும்.சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டவரகள் மைதானத்தில் உறுதிமொழி எடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளஸ்-1 பொதுத்தேர்வில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி: மாணவியர்கள் தான் அதிகம்..!

10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம்.. பின்தங்கிய சென்னை மாவட்டம்.. 38ல் 34வது இடம்..!

தமிழகத்தில் வீசும் பவன் கல்யாண் காற்று! விஜய்க்கு போட்டியா?

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டம்.. அன்புமணி உள்பட பலர் ஆப்செண்ட்?? - ராமதாஸ் விடுத்த எச்சரிக்கை!

2026 மட்டுமல்ல.. 2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!

அடுத்த கட்டுரையில்