Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்.4-ம் தேதி முதல் கல்லூரிகள் துவக்கம்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (19:20 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்காமல் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதையடுத்து செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. 
 
1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள் நவம்பர் 1 முதல் இயங்கும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் தற்போது கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் துவக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அனைத்து வகை கலை, அறிவியல் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறைவுபெற்ற நிலையில் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்துவிட்டு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளை தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments