Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேஸ் சிலிண்டர் விலை உயர்வு: மக்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (10:57 IST)
தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது போல ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சமையல் கியாஸ் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று எல்பிஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை மட்டும் உயர்ந்து உள்ளதாக அறிவித்துள்ளது. வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.2234.50 என உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமின்றி டெல்லி மும்பை கொல்கத்தா ஆகிய முக்கிய நகரங்களிலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஓட்டல்கள் மற்றும் டீ கடைகளில் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டம்!

ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு.. ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

குறைந்து வரும் மக்கள் தொகை..! "நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்" - ரஷ்ய அதிபர் வேண்டுகோள்.!!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழுத்தம்.. விரும்பியவரை முதல்வராக்க முடியவில்லை: பாஜக

மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நேரலைக்கு தடை விதிக்க முடியாது.! மேற்குவங்க கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments