Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் வீடுகளை கண்காணிக்க தனிக்குழு - மாநகராட்சி ஆணையர் !!

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (18:59 IST)
சென்னையில் வீடுகளை கண்காணிக்க தனிக்குழு - மாநகராட்சி ஆணையர் !!
கொரோனா வைரஸ் உலகெங்கிலும் 1,82,000-க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. மேலும் 7,100 க்கும்  மேற்பட்ட இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், சீனாவில் 80,800-க்கும் மேற்பட்டோரும் இத்தாலியில் 27, 900 - க்கு மேற்பட்டோரும் பாதிக்கப்படுள்ளனர். 
 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல மாநிலங்களில் கொரோனா காரணமாக எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று காலை வரை இந்தியாவில் சுமார் 129 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியிடப்பட்ட நிலையில், மூவர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்து இந்தியாவில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மருத்துவமனையில் மருத்துவர் கண்காணிப்பில் உள்ளனர்.
 
இந்நிலையில், சென்னையில் பிரபல மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியான தி நகர் எனப்படும் தியாகராய நகரில் கடைகளை மூடப்படும் எனவும், மக்கள் அத்தியாவசியமின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும்  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. 
 
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளதாவது :
 
சென்னையில் நாள் ஒன்றுக்கு 80 வீடுகள் மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்படும்,. கொரொனோ குறித்து அறிகுறி தெரியவந்தால், 044 -45969424 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
 
மேலும், அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாவது :
 
விடுமுறை கால சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,  வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மிலாடி நபி விடுமுறை நாள்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

பங்குச்சந்தையில் இன்று சிறிய இறக்கம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. மீண்டும் ரூ.55,000க்குள் ஒரு சவரன்..!

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மு.க,ஸ்டாலின், விஜய்!

இன்று மாலை பவள விழா.. முப்பெரும் விழாவில் உங்களை காணக் காத்திருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments