Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு த.வெ.க., தலைவர் விஜய் வாழ்த்து!

Sinoj
வெள்ளி, 1 மார்ச் 2024 (15:01 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவர் விஜய் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
 
அதன்படி, 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது.  இப்பொதுத்தேர்வு இன்று முதல் வரும் மார்ச் 22 ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
 
முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள 7534 பள்ளிகளில் இருந்து 7.72 லட்சம் மாணவர்கள்,21875  தனித்தேர்வர்கள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர், 125 சிறைக் கைதிகள் என் மொத்தம் 7.94 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
 
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகள் கூறினர்.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவர் விஜய் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
அதில், ''தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றிருந்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் என் அன்புத் தம்பி, தங்கைகள் அனைவரும் அனைத்துத் தேர்வுகளையும் உற்சாகத்துடன் எதிர்கொண்டு வெற்றி பெற்று, விரும்பிய துறைகளில் உச்சம் தொடர் வாழ்த்துகள் ''என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராமர் புராண கதாப்பாத்திரமா? இந்துக்களை அவமதிக்கிறார் ராகுல்காந்தி! - பாஜக கண்டனம்!

அமெரிக்காவுக்கு வெளியே படம் எடுத்தால் 100 சதவீதம் வரி! - ட்ரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சியில் ஹாலிவுட்!

ஐபிஎல் பார்த்தேன்! வைபவ் சூர்யவன்ஷி அபாரமாக ஆடினார்! - புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி!

7 மாவட்டங்களில் குளிர்விக்க வரும் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

திமுக பொதுக் கூட்டத்தில் திடீரென சாய்ந்த மின்கம்பம்.. நூலிழையில் உயிர் தப்பித்த ஆ ராசா..!

அடுத்த கட்டுரையில்
Show comments