Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்! 7 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்! - அடுத்தடுத்து அதிரடி!

Stalin
Prasanth Karthick
வெள்ளி, 7 மார்ச் 2025 (14:57 IST)

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்து திமுக பேசி வரும் நிலையில் அடுத்தக்கட்டமாக 7 மாநில முதல்வர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

 

மத்திய அரசு அடுத்த ஆண்டில் இந்தியா முழுவதும் தொகுதி மறுசீரமைப்பு செய்ய உள்ள நிலையில், இதனால் மக்கள்தொகை அதிகம் உள்ள வட மாநிலங்களில் தொகுதிகள் அதிகமாகவும், தென் மாநிலங்களில் தொகுதிகள் குறைவாகவும் மாறும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து சமீபத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிய திமுக இதுத்தொடர்பாக தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இந்நிலையில் இதன் அடுத்த கட்டமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 7 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

பினராயி விஜயன், நவீன் பட்நாயக், சித்தராமையா, மம்தா பானர்ஜி, ரேவந்த் ரெட்டி, சந்திரபாபு நாயுடு, பகவந்த்மான் சிங் உள்ளிட்டோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து தொடர் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து 22ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு இன்னொரு அடி.. இந்தியாவின் நட்பு நாடாகிறது ஆப்கானிஸ்தான்..!

அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பிரதமர்..!

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? ஹாங்காங், சிங்கப்பூரில் பரபரப்பு..!

டாய்லெட் வெடித்து சிதறியதில் 20 வயது இளைஞர் படுகாயம்.. விசாரணையில் திடுக் தகவல்..!

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய இரட்டை சகோதரிகளுக்கு ஒரே மதிப்பெண்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments