Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சோதனைகளில் குழப்பம் – திருச்சியில் ஆய்வகத்துக்கு சீல்!

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (10:30 IST)
திருச்சியில் செயல்பட்டு வந்த கொரோனா சோதனை மையம் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி உறையூரில் டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர் என்ற ஆய்வகம் செயல்பட்டு வந்தது. இதில் கொரோனா சோதனைக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதமும் மேலும் முடிவுகளில் குளறுபடியும் நடந்துள்ளது. கொரோனா இல்லாதவர்களுக்கும் கூட கொரோனா பாஸிட்டிவ் என முடிவுகள் வந்துள்ளது.

இதனால் அந்த ஆய்வகத்துக்கு கடந்த வாரம் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நடந்த விசாரணையில் அந்த ஆய்வக கட்டிடமே மாநகராட்சி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த முழுக் கட்டிடத்தையும் மூடி சீல் வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments