Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடு முட்டி சிறுமி படுகாயமடைந்த சம்பவம்: மாட்டின் உரிமையாளர் கைது..!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (16:33 IST)
சென்னை அரும்பாக்கத்தில் இன்று பள்ளிச் சிறுமி பள்ளி முடிந்து விட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் திடீரென மாடு முட்டியதால் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து இது குறித்த சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இதனை அடுத்து சென்னை தெருக்களில் மாடுகளை மேயவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாட்டின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும்  சென்னை மாநகர ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 
இந்த நிலையில்  சென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டி சிறுமி படுகாயம் அடைந்த நிலையில் மாட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார் . மேலும் தெருக்களை நம்பி மாடு வளர்ப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் படுகாயம் அடைந்த சிறுமிக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments