Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பண்டிகை.. சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கும் தேதி அறிவிப்பு..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (12:02 IST)
வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னை தீவு திடலில் பட்டாசு விற்பனை தொடங்கும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.  
 
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவு திடலில் பட்டாசு கடைகள் அமைக்கப்படும் என்றும் பொதுமக்கள் பட்டாசுகளை ஏராளமாக இங்கு வந்து வாங்கி செல்வார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடயிருக்கும் நிலையில் சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை பட்டாசு விற்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
 
மேலும் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்காக 55 கடைகள் அமைக்கப்பட்ட உள்ளன என்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

இரண்டே ஆண்டுகளில் இழுத்து மூடப்பட்ட 28 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

போர் பதட்டம் இருந்தாலும் பங்குச்சந்தையில் ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments