Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதி தீவிர புயலாக மாறிய ஹமூன்.. 6 மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை..!

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (07:46 IST)
வங்க கடலில் தோன்றியுள்ள ஹமூன் புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வடமேற்கு வங்க கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஹமூன் புயல் தற்போது அதி தீவிர  புயலாக   மாறி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 இந்த நிலையில் ஹமூன் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் அதாவது தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மேலும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு நல்ல மழை இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கும்மிருட்டில் பள்ளம்! தவறி விழுந்த தம்பதி! இரவு முழுவதும் துடித்த உயிர்கள்! - திருப்பூரில் கோர விபத்து!

பெஹல்காம் சம்பவத்தில் முஸ்லீம் இளைஞர்களின் துணிச்சல் ஆறுதல் அளிக்கிறது: வைகோ

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி மரணம்.. கோட்டா என்பது பயிற்சி நகரமா? பலி நகரமா?

கண்ணுக்கு எதிரே மோதிக் கொண்ட கார்கள்.. பதறி ஓடிவந்த பிரியங்கா காந்தி! - வைரலாகும் வீடியோ!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

அடுத்த கட்டுரையில்
Show comments