Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு பெயர் வைப்பு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (14:46 IST)
வங்கக் கடலில் உருவான புயலுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதோடு, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
 
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக இருப்பதாகவும், அக்டோபர் 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 
 இந்த புயல் ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தை நோக்கி நகர்வதால், தமிழகத்திற்கு பெரிய பாதிப்பு இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு "டானா" என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், வங்கக் கடலில் உருவாகும் புயலின் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில், இடையே 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அக்டோபர் 21, 22, 23, 24 ஆகிய நான்கு நாட்களிலும் சூறாவளி காற்று வீசும் என்றும், அதிகபட்சமாக 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments