Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகரில் போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பேன்: தீபா

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (23:41 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ள நிலையில் இந்த தொகுதியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன



அதிமுகவை பொருத்தவரை இந்த தொகுதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு அபாரமாக வெற்றி பெற்ற தொகுதி என்பதால் இந்த தொகுதியை கைப்பற்றுவது என்பது அவர்களது தன்மானப்பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஆளுங்கட்சி மீது மக்களுக்கு உள்ள அதிருப்தியை அறுவடை செய்ய திமுகவும் மற்ற எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில் ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதோடு அவர் நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை, ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று அதிமுக தொண்டர்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக கூட தீபா இல்லை என்று தேர்தல் ஆணையம் தெள்ளத்தெளிவாக கூறியிருக்கும் நிலையில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்று, அதிமுக தொண்டர்களின் ஆதரவுடன் ஆட்சியை பிடிப்பேன் என்று கூறியிருப்பது நெட்டிசன்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments