Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்!

Webdunia
சனி, 22 அக்டோபர் 2022 (12:36 IST)
தீபாவளியையொட்டி, 3,300 அரசுப் பேருந்துகளில் இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்.


இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 24 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளதால் அரசு போக்குவரத்து கழகம் பல வழித்தடங்களிலும் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது.

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர தனியார் பேருந்துகள் பலவும் முழுவதும் புக் ஆகியுள்ளது.

சென்னை, கோவை, திருப்பூர் போன்ற ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னை ஜிஎஸ்டி சாலையில் நேற்று மாலையில் இருந்து இன்று காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தீபாவளியையொட்டி, 3,300 அரசுப் பேருந்துகளில் இதுவரை 1,65,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அரசுப் பேருந்துகளில் செல்ல 1,66,659 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் எனவும் போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது.

 Edited By: Sugapriya Prakash

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments