Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க என்ன இயேசுவை சுட்ட கோட்சே வாரிசா? – குழப்பிவிட்ட திண்டுக்கல் சீனிவாசன்!

Tamilnadu
Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (10:48 IST)
அதிமுகவின் திட்டங்களை திமுக தொடர்ந்து விமர்சித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த மாதம் ஜனவரியில் தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பணமாக ரூ.2500 வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பேசியுள்ள அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “பொங்கல் பணமாக ரூ.2500 வழங்க முதல்வர் அறிவித்துள்ளதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் இதே திமுக முன்னர் ஆட்சியில் இருந்தபோது பொங்கலுக்கு பணம் வழங்கியது. நாங்கள் என்ன இயேசுவை சுட்ட கோட்சேவா?” என பேசியுள்ளார். காந்தி என்பதற்கு பதிலாக இயேசு என அமைச்சர் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது ஓய்வு நாளில் நீதிபதி குற்றச்சாட்டு

மத்திய அரசு நிதி வழங்கவில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த தமிழக அரசு..!

நேற்று அதிர்ச்சி கொடுத்த பங்குச்சந்தை, இன்று மீண்டும் ஏற்றம்.. சென்செக்ஸ் நிலவரம் என்ன?

இறங்குவது போல் சென்ற தங்கம் மீண்டும் உச்சம்.. இன்று ஒரே நாளில் ரூ.1760 உயர்வு..!

இந்தி தெரியாது போடா என இனி கூற வேண்டிய அவசியம் இல்லை: மொழி பெயர்த்து தருகிறது கூகுள்

அடுத்த கட்டுரையில்
Show comments