Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் கோயம்பேடு கொரோனா பாதிப்புகள்! – 7500 பேரை கண்டறிய நடவடிக்கை!

Webdunia
திங்கள், 4 மே 2020 (11:15 IST)
சென்னை கோயம்பேட்டிலிருந்து கண்டறியப்பட்டுள்ள கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் மேலும் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட் வழியாக கொரோனா பரவியவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் 220 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்பில் இருந்ததாக விழுப்புரம், கடலூர் பகுதிகளில் பலருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கோயம்பேடு சந்தையில் பணி புரிந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் உட்பட 7,500 பேரை கண்டுபிடிக்கும் பணிகளில் அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஈடுபட்டுள்ளன. கோயம்பேடு மார்க்கெட்டில் தொடர்புடைய 73 பேர் விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூரில் கோயம்பேடு சந்தையோடு தொடர்புடைய ஒருவர் கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டம்!

ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் பரிசு.. ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..!

குறைந்து வரும் மக்கள் தொகை..! "நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்" - ரஷ்ய அதிபர் வேண்டுகோள்.!!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழுத்தம்.. விரும்பியவரை முதல்வராக்க முடியவில்லை: பாஜக

மருத்துவர்கள் பேச்சுவார்த்தை நேரலைக்கு தடை விதிக்க முடியாது.! மேற்குவங்க கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments