Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக ஒரு கட்சியல்ல, பணத்திற்காக நடத்தப்படும் ஒரு கம்பெனி: சந்திரகுமார்

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (06:16 IST)
கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த சந்திரகுமார், தேமுதிக மீதும் பிரேமலதா மற்றும் சுதீஷ் மீதும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
 
தேமுதிகவின் அனைத்து முடிவுகளையும் பிரேமலதாவும் சுதீஷும் மட்டுமே எடுத்து வருவதாகவும், இருவருக்கும் கொள்கை எல்லாம் கிடையாது, ஒரே குறிக்கோள் பணம் தான் என்றும் சந்திரகுமார், பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
தேமுதிக ஒரு காலத்தில் கட்சியாக இருந்தது என்றும், ஆனால் தற்போது பணத்திற்காக நடத்தப்படும் ஒரு கம்பெனி போல் செயல்படுவதாகவும் கூறிய சந்திரகுமார், அதிமுகவிடம் அதிக பேரம் பேசுவதற்காக திமுகவிடம் கூட்டணி சேர்வது போல நாடகமாடியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சந்திரகுமாரின் இந்த குற்றச்சாட்டுக்கு தேமுதிக நிர்வாகிகள் என்ன பதில் அளிக்க போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments