Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படையப்பா ஸ்டைலில் பாம்பை பிடித்த திமுக வேட்பாளர்! – வாக்கு சேகரிப்பில் தீவிரம்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (10:30 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க சென்ற திமுக வேட்பாளர் பாம்பு பிடித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியான நிலையில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

குன்னூரில் உள்ள வார்டு ஒன்றில் திமுக சார்பில் ராமசாமி என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தலை முன்னிட்டு வார்டு தெருக்களில் ராமசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது பாம்பு ஒன்று அந்த தெருவை சேர்ந்த லீலா என்பவது வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதையறிந்த ராமசாமி உடனடியாக அந்த வீட்டிற்கு சென்று லாவகமாக பாம்பை பிடித்துள்ளார். பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினரிடம் பாம்பை ஒப்படைத்துவிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்ற இருவர்? - பஞ்சாபில் அதிர்ச்சி!!

நடந்து செல்லும் பக்தர்களுக்கு அலிபிரி வரை இலவச பஸ்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

சபரிமலையில் பக்தர்களுக்கான முன்பதிவு நிறுத்தம்: என்ன காரணம்?

துருக்கியில் இருந்து பாகிஸ்தான் வந்த போர்க்கப்பல்.. இந்தியாவை தாக்கவா?

தங்கம் விலை இன்று சிறிய அளவில் ஏற்றம்.. ஆனால் சரிய வாய்ப்புள்ளதாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments